இலங்கை செய்தி

இந்திய துணை ஜனாதிபதிக்கு தமிழரசுக் கட்சி அவசரக் கடிதம்!

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் மீள் வருகை மற்றும் அது தொடர்பான நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நேற்று எம்முடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தந்தமைக்காகவும், அந்தச் சந்திப்பின் போது இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் தமிழ் அகதிகள் தொடர்பாகத் தாங்கள் வெளியிட்ட ஆக்கபூர்வமான கருத்துக்களுக்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிச் செய்தியில் உள்ளவாறு, இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இளைஞர் ஒருவர் நேற்று முன்னெடுத்த போராட்டம் தொடர்பில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நாம் ஏற்கனவே பேசிக்கொண்டதற்கிணங்க, மேற்படி இளைஞரின் மீள் வருகைக்காக இந்திய அரசின் தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களைத் துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்க வேண்டும்.

அதேவேளையில், இவரைப் போலத் தாயகம் திரும்ப விரும்பும் ஏனைய அகதிகளுக்கும் தங்களது அரசுத் தரப்பிலிருந்து செய்யப்பட வேண்டிய நடைமுறைகளைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!