ஐரோப்பா செய்தி

இத்தாலியின் பலேர்மோ விமான நிலையம் மூடப்பட்டது

இத்தாலியை பாதித்துள்ள அதிக வெப்பநிலையுடன் காட்டுத் தீ பரவி வருவதால் சிசிலி தீவில் உள்ள பலேர்மோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நாட்களில் அந்த பகுதியில் வெப்பநிலை 47.6 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது.

காட்டுத் தீ காரணமாக ரயில் போக்குவரத்தும், தரை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக இத்தாலியில் உள்ள 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலி தவிர்ந்து ஐரோப்பாவின் பல நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி