உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அடுத்த மோதலில் அதிக அழிவுத்திறன் கொண்ட ஆயுதங்களை களமிறக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார்.

அடுத்தகட்ட மோதல் வெடிக்குமானால், ஈரான் தனது மிக அதிக அழிவுத்திறன் கொண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் (IRGC) ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹோசைன் மொஹெபி எச்சரித்துள்ளார்.

ஈரான் அரச ஒளிபரப்பான IRIB இல் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஊடகமொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

ஈரான் தொடர்ச்சியாகத் தனது இராணுவ உத்திகளையும் ஆயுத உற்பத்தியையும் மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர்,

“புரட்சிகர காவல் படையின் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களின் அழிவுச் சக்தி, முந்தைய போர்களில் பயன்படுத்தப்பட்டதை விடப் பல மடங்கு அதிகம்.

மீண்டும் ஒரு போர் வெடிக்குமானால், அனைத்து அம்சங்களிலும் நமது ஆயுதங்கள் கடந்த காலத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிகத் துல்லியத்தன்மை, நீண்ட தூரப் பாயும் திறன் மற்றும் நவீன தொழில்நுட்பக் கட்டமைப்பு கொண்ட அடுத்த தலைமுறை வெடிபொருட்களையும் ஏவுகணைகளையும் ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளதாக ஹோசைன் மொஹெபி
சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி