உலகம் செய்தி

அமெரிக்காவுடன் ஈரான் ரகசிய பேச்சு?

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் எவ்வித நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் Reza Amiri Moghadam இன்று (25) அறிவித்தார்.

ஈரானுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தூதவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர நட்பு நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டாலும், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கத் தரப்புடன் நேரடியாகப் பேசவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு தயார் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதுவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதேவேளை சமரச பேச்சுக்குரிய 15 அம்ச திட்டத்தை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி