சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் அவர் இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவிலான விடயங்கள் குறித்துச் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
(Visited 31 times, 1 visits today)