இலங்கை

இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 01 கிலோ 556 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் ஆவார்.

தாய்லாந்தின் பேங்காக்கில் குஷ் போதைப்பொருட்களை வாங்கிய அவர், பின்னர் இந்தியாவின் பெங்களூருக்கு வந்து, பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 03 பொதிகளில் குஷ் ரக போதைப்பொருளை வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்