ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை 725 யூரோவாக வழங்குமாறு கோரிக்கை

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணம் 725 யுரோவாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 725 யுரோ வழங்கப்பட வேண்டும் என்று சமூக அமைப்பு ஒன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதாவது தற்பொழுது 502 யுரோவை தனி நபர் ஒருவர் பெற்றுக்கொண்டு வருவதாக தெரியயவந்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது உணவு பொருட்களின் விலை ஜெர்மனியில் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் போது பொருட்களின் விலையானது 17 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அதனால் ஆக குறைந்தது 200 யுரோ வரை சமூக உதவிபணத்தை உயர்த்த வேண்டும் என அரசாங்கத்திடம் குறித்த அமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

மேலும் மின்சார கட்டணத்தை இந்த சமூக உதவி பணத்திலேயே மக்கள் செலுத்தி வந்துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் இந்த மின்சார கட்டணத்தை செலுத்த கூடிய வகையில் அரசாங்கமானது இந்த நிதி உதவியை வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பானது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content