ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு கடிதம் எழுதிய இம்ரான் கான்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ராணுவத் தளபதி சையத் அசிம் முனிருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே “வளர்ந்து வரும் இடைவெளி”க்கான காரணங்களை அந்த கடிதத்தில் இம்ரான் கான் விளக்கியுள்ளார். PTI தலைவர் வழக்கறிஞர் கோஹர் அலி கான் இந்த கடிதத்தை உறுதிப்படுத்தினார்.

PTI தலைமையின் கூற்றுப்படி, இந்தக் கடிதம், முக்கிய தேசிய கவலைகளை எடுத்துரைக்கிறது மற்றும் மக்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

ஊடகங்களுக்கு பேட்டி அளித்த வழக்கறிஞர் கோஹர், முன்னாள் பிரதமராக இம்ரான் கான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகவும், பாகிஸ்தான் ஆயுதப் படைகள் செய்த தியாகங்களைப் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி