ஐரோப்பா

அச்சுறுத்தலையும் மீறி பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வாளர்கள்…பிரதமர் ரிஷிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலையும் மீறி, கடந்த 4 மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம் மிக விரைவில் அமுலுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் 2 சிறு ரப்பர் படகுகளில் டசின் கணக்கானோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலானோர் ஆண்கள் என்றே கூறப்படுகிறது. அவர்களை டோவரில் மீட்டு பிரிட்டிஷ் எல்லைப் படைக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. புலம்பெயர் மக்களின் இந்த வருகை, பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்திற்கு பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.

UK Parliament approves Rwanda deportation bill, ending weeks of legislative  stalemate | WSAV-TV

இந்த ஆண்டில் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் ரிஷி சுனக், சட்டவிரோத புலபெயர் மக்களின் எண்ணிக்கை மற்றும் சிறு படகுகளின் வருகையை மொத்தமாக கட்டுப்படுத்துவார் என்றே உறுதி அளித்திருந்தார்.

கடந்த 4 மாதங்களில் சிறிய படகுகள் மூலம் இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். பலர் போர் அல்லது பஞ்சத்தில் இருந்து தப்பி ஐரோப்பா வழியாக பயணித்து பிரித்தானியாவுக்குள் நுழைகின்றனர்.இதுபோன்ற சட்டவிரோத நுழைதல், ருவாண்டா திட்டத்தால் கட்டுப்படுத்த முடியும் என்றே ரிஷி சுனக் நம்புகிறார்.

அடுத்த 9 முதல் 11 மாதங்களில் ருவாண்டா திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றே அரசாங்கம் நம்புகிறது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content