இந்தியா

கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை: சி.வி.சண்முகம் கருத்து

”கூட்டணி குறித்து நான் யாரையும் சந்திக்கவில்லை, ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது – என திண்டிவனத்தில் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்றது.

வழக்கறிஞர் அணியின் தொகுதி செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமாகிய சி.வி சண்முகம் கலந்துக் கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

இதன்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிவி சண்முகம் நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும்,ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்றும் கூறி விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content