இலங்கை

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சதான் – ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் அதிரடி அறிவிப்பு!

  • November 3, 2025
  • 0 Comments

நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராகச் செயற்பட்டு வருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதி என நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது வருமாறு: “கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச களமிறங்கியதால் தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி […]

உலகம் செய்தி

பசுபிக் தீவு நாடுகளின் ஆதரவு: ஆஸ்திரேலியாவிற்கு காலநிலை மாநாடு நடத்தும் வாய்ப்பு?

  • November 3, 2025
  • 0 Comments

ஐ.நா. காலநிலை மாநாட்டை யார் நடத்துவது என்பது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு நாடுகளும் ஐ.நாவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு விட்டுக்கொடுக்க மறுக்கும் பட்சத்தில் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு ஜேர்மனி கைகளுக்குள் சென்றுவிடும். இந்நிலையில் இது விடயத்தில் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் துருக்கி ஜனாதிபதிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கடிதம் எழுதியுள்ளார். 18 நாடுகளைக் கொண்ட பசிபிக் தீவு […]

உலகம் செய்தி

தென் சீனக் கடலில் பதற்றம் – சீனாவின் நடவடிக்கைகளுக்கு பென்டகன் தலைவர் கண்டனம்

  • November 3, 2025
  • 0 Comments

தென் சீனக் கடலில் சீனாவின் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகப் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் குற்றம் சாட்டினார். மேலும், சீன அச்சுறுத்தல்களுக்குக் கூட்டாகப் பதிலளிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தொழில்நுட்பம் மூலம் ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் பலதரப்புப் பேச்சுவார்த்தைகளை உள்ளடக்கிய கோலாலம்பூரில் நடந்த இரண்டாவது நாள் கூட்டங்களில், ஆசியான் (ASEAN) பாதுகாப்பு அமைச்சர்களுக்கு பகிரப்பட்ட கடல்சார் கள விழிப்புணர்வை உருவாக்க ஹெக்செத் முன்மொழிந்தார். சீனா மற்ற […]

உலகம்

ஆஸ்திரேலியா தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்! வேகமாக ஏற்படும் மாற்றம்

  • November 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா (Australia) அதன் எல்லைக் கோட்டிலிருந்து படிப்படியாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். புதிய ஆய்வுகளுக்கு அமைய, மணிக்கு சுமார் 7 சென்டிமீட்டர் வேகத்தில் வடக்குப் பகுதியை நோக்கி ஆஸ்திரேலியா நகர்ந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது எதிர்காலத்தில் ஒரு பெரிய நிலவியல் மோதலுக்கு வழிவகுக்கும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகாவிலிருந்து பிரிந்த ஆஸ்திரேலியா, இப்போது உலகின் அதிவேகமாக நகரும் கண்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த நகர்வு […]

உலகம்

ஆப்கானிஸ்தானை மீண்டும் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி – 150 பேர் காயம்

  • November 3, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீப்பில் (Mazar-i-Sharif) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 150 பேர் காயமடைந்தனர். அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ப்ளூ மசூதிக்கு (Blue Mosque) கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்த இடம் இஸ்லாத்தின் நான்காவது கலீபாவும், நபிகள் நாயகத்தின் மருமகனுமான ஹஸ்ரத் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு வருகை தரும் வத்திக்கான் செயலர் – இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புகள்

  • November 3, 2025
  • 0 Comments

இலங்கைக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். முக்கிய […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் தீவிரம் – முட்டைத் தட்டுப்பாடு அபாயம்!

  • November 3, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவுவதோடு கோழிப் பண்ணைகள் மற்றும் முட்டைகளைப் பாதிக்கிறது. இதுவரை, நோய் பரவாமல் தடுக்க சுமார் 500,000 கோழிகள், வாத்துகள், வான்கோழிகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் மோசமடையக்கூடும் எனவும், நிலைமை ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் காலத்தைப் போலவே உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், முட்டை விலைகள் விரைவில் உயரக்கூடும். பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி, 2.50 யூரோக்களிலிருந்து 3.50 யூரோக்களுக்கு உயரும் என […]

இலங்கை

ஆவியாக வர முடியாவிட்டால் அடுத்த பிறவியில் பழி தீர்ப்பேன் – எம்.பி.யின் ஆவேசம்

  • November 3, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டமானது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்குரிய நடவடிக்கை அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். எனவே, அரசியல் பேதங்களை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நுகேகொடையில் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். நுகேகொடை போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு விடுத்துள்ள நிலையிலேயே சாமர எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “நுகேகொடை போராட்டமானது தேசிய மக்கள் சக்தி […]

கருத்து & பகுப்பாய்வு முக்கிய செய்திகள்

பூமியில் பல மர்மங்களுடன் புதைந்திருந்த பனிக்கட்டியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  • November 3, 2025
  • 0 Comments

பூமியில் மறைந்திருந்த பனிக்கட்டிகளையும், அதனுள் உறைந்த காற்றையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஈஸ்ட் அண்டார்டிகாவிலுள்ள ஆலன் ஹில்ஸ் (Allan Hills) பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், 60 இலட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டியை விஞ்ஞானிகள் மீட்டுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக ஆய்வுகளை மேற்கொள்ளும் குழு சுமார் இரண்டு கிலோமீட்டர் ஆழத்திலுள்ள பனிக்கட்டிகளை மீட்டு ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். […]

செய்தி

தீவிரம் அடையும் ரஷ்ய – உக்ரைன் போர் – முக்கிய நகரைக் கைப்பற்ற ரஷ்யா கடும் போராட்டம்

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உக்ரைனின் மிக முக்கிய நகரான போக்ரோவ்ஸ்க்கைக் கைப்பற்ற ரஷ்யா பல மாதங்களாக முயற்சித்து வருகிறது. எனினும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் உக்ரைன் படைகள் கடுமையான பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. பெருந்தொகைப்படைகளுடன் போக்ரோவ்ஸ்க் நகருக்குள் ரஷ்யப் படைகள் புகுந்த போதும், உக்ரைனின் கடுமையான தாக்குதல் காரணமாக பின்வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, 11 உயரடுக்கு […]

error: Content is protected !!