இந்தியா செய்தி

ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி மோதி 14 பேர் உயிரிழப்பு

  • November 3, 2025
  • 0 Comments

ஜெய்ப்பூரில்(Jaipur) வேகமாக வந்த டிப்பர் லாரி பல வாகனங்கள் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள லோஹா மண்டி(Loha Mandi) பகுதியில் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைக்காக உள்ளூர் கன்வாடியா(Kanwatia) மருத்துவமனைக்கும் பலத்த காயமடைந்தவர்கள் சவாய் மான் சிங்(Sawai Man Singh) மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் […]

உலகம் செய்தி

மங்கோலியாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

  • November 3, 2025
  • 0 Comments

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து(San Francisco) டெல்லிக்கு(Delhi) செல்லும் ஏர் இந்தியா(Air India) விமானம், மங்கோலியாவின்(Mongolia) உலான்பாதரில்(Ulaanbaatar) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா வழியாக இயக்கப்படும் AI174 ஏர் இந்தியா விமானம், உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறங்கியது, தற்போது தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், “எதிர்பாராத சூழ்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். ஏர் இந்தியாவின் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகவும் ஆபத்தான கடல் உயிரினம்

  • November 3, 2025
  • 0 Comments

மிதக்கும் பயங்கரங்கள் என்றும் அழைக்கப்படும் பல போர்த்துகீசிய மேன் ஓ’ வார்(Portuguese Man O’ War) உயிரினங்கள், பிரித்தானியாவின் பிரபலமான கடற்கரையில் கரை ஒதுங்கியதை அடுத்து, வேல்ஸில்(Wales) கடற்கரைக்குச் செல்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர்ட் டால்போட்(Port Talbot) கடலோர காவல்படை மக்கள் விழிப்புடன் இருக்கவும், உயிரினங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. தற்போது அபெராவோன்(Aberavon) கடற்கரையில் காணப்படும் இந்த உயிரினம் இதற்கு முன்னதாக பெம்பிரோக்ஷயர்(Pembrokeshire), க்வைனெட்(Gwynedd) மற்றும் ஆங்கிள்சி(Anglesey) கடற்கரைகளிலும் காணப்பட்டதாக Express.co.uk தெரிவித்துள்ளது. போர்த்துகீசிய மேன் […]

உலகம் செய்தி

80 வயதில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா

  • November 3, 2025
  • 0 Comments

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா(Khaleda Zia) பிப்ரவரி மாதம் எதிர்பார்க்கப்படும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது அரசியல் கட்சி தெரிவித்துள்ளது. 80 வயதான கலீதா ஜியா,மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார் என்று மூத்த வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர்(Mirza Fakhrul Islam Alamgir) உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2008 முதல் பிரித்தானியாவில் வசிக்கும் கலீதா ஜியாவின் 59 வயது மகன் தாரிக் ரஹ்மானும்(Tarique Rahman) தேர்தலில் போட்டியிடுவார் என்று மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் […]

செய்தி விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான T20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்

  • November 3, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka)  பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இதேவேளை கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவின் கம்சட்கா  பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

உணவு உதவி சலுகைகளை இழக்கும் 42 மில்லியன் அமெரிக்கர்கள்!

  • November 3, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கருவூலத்துறை நிதி பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான வாத பிரதிவாதங்கள் செலவீன சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதன்காரணமாக பெரும்பாலான அரச ஊழியர்கள் சம்பளத்தை இழந்துள்ளனர். ஏறக்குறைய 4000 பேர் ஊதியத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உச்சநீதிமன்றம் மறு அறிவிப்புவரை மூடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள்  உணவு உதவி சலுகைகளை இழக்க நேரிடும் எனவும், சுகாதார மானியங்களும் காலாவதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சிக்கல் நிலையை […]

பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் சாதனை படைக்கு ”பாகுபலி தி எபிக்“

  • November 3, 2025
  • 0 Comments

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் இந்தியாவைத் தாண்டி உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் என பலரும் நடித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்த நிலையில், 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளிவந்தது. பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்கிற படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் திரைக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா?

  • November 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை ரயிலில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர் ஒருவர்  ரயில் நிலையங்களில் விமான நிலைய பாணி பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா என போக்குவரத்துச் செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போக்குவரத்து செயலாளர்,  இந்த திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றது எனக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் பலர் இந்த திட்டம் குறித்து யோசிக்கக்கூடும்.  எங்களிடம் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான […]

உலகம்

ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சீனா!

  • November 3, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை நீட்டிப்பதாக சீனா இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 31, 2026 வரை விசா இல்லாத கொள்கை நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் சுவீடனும் இந்த திட்டத்தில்  உள்வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, வணிகப் பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் […]

error: Content is protected !!