ஐரோப்பா செய்தி

காவலில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு பிரெஞ்சு அதிகாரிகள்

  • November 2, 2025
  • 0 Comments

இரண்டு பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகள் காவலில் இருந்தபோது ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் தனது தொலைபேசியில் இந்த செயலை படம்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸின் வடகிழக்கு புறநகரின் பாபிக்னியில்(Bobigny) உள்ள நீதிமன்றத்தில் காவலில் இருந்தபோது தன்னைத் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, அதிகாரிகள் ஆரம்பத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 26 வயதுடைய பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட 23 மற்றும் 35 வயதுடைய இரண்டு […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்

  • November 2, 2025
  • 0 Comments

கர்நாடகாவின் பெரியபட்ணாவில்(Periyapatna) உள்ள பெட்டடபுராவில்(Pettahpura) ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய அரபியா பானு(Arabiya Bhanu), தனது ஒன்றரை வயது மகள் மற்றும் பத்து நாள் பெண் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அவரது கணவர் பெங்களூருவில்(Bengaluru) உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை செய்கிறார் என்றும், அவர் பெட்டடபுராவில் உள்ள தனது வீட்டில் […]

செய்தி விளையாட்டு

முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்தியா

  • November 2, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதின. நாணய சுழற்சியை வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஷபாலி […]

உலகம் செய்தி

ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு வங்கதேசத்தில் அரசியல் வன்முறையில் 281 பேர் மரணம்

  • November 2, 2025
  • 0 Comments

மாணவர் தலைமையிலான போராட்டங்கள் சர்வாதிகார முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) வெளியேற்றியதில் இருந்து வங்கதேசத்தில் அரசியல் வன்முறையில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நாட்டின் முக்கிய மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. டாக்காவை(Dhaka) தளமாகக் கொண்ட உரிமைகள் அமைப்பான ஒதிகரின்(Odhikar) அறிக்கை, ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்து அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற ஆகஸ்ட் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை அரசியல் சம்பந்தப்பட்ட வன்முறையில் 281 பேர் கொல்லப்பட்டதாகக் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் […]

இந்தியா செய்தி

ராஜஸ்தானில் பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

  • November 2, 2025
  • 0 Comments

ராஜஸ்தானில்(Rajasthan) நிறுத்தப்பட்டிருந்த லாரி டிரெய்லர் மீது பேருந்து மோதியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ஜெய்ப்பூரில்(Jaipur) உள்ள பாரத் மாலா(Bharat Mala) நெடுஞ்சாலையில் உள்ள மடோடா(Matoda) கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஜோத்பூரில்(Jodhpur) உள்ள சுர்சாகர்(Sursagar) பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் பிகானரில்(Bikaner ) உள்ள கோலாயத்(Kolayat) கோவிலில் இருந்து வரும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முதல்வர் பஜன் லால் சர்மா(Bhajan Lal […]

உலகம் செய்தி

போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க முயன்ற மெக்சிகன் மேயர் சுட்டுக்கொலை

  • November 2, 2025
  • 0 Comments

வன்முறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிறைந்த ஒரு பகுதியில் நடந்த பொது நிகழ்வின் போது, ​​மெக்சிகன்(Mexican) நகர மேயர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேற்கு மாநிலமான மிக்கோவாகனில்(Michoacan) உள்ள உருபானில்(Urbán) ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடந்த கூட்டத்தில் மேயர் கார்லோஸ் மான்சோ(Carlos Manzo) கலந்து கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஸ்பானிஷ் செய்தித்தாள் எல் பைஸ்(El Pais) தெரிவித்துள்ளது. இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஒருவர் சம்பவ இடத்திலேயே […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் 297 ஓட்டங்கள் குவித்த இந்தியா

  • November 2, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெறும் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் […]

இலங்கை

வியட்நாமில் நடைபெறும் ஐ.நா சைபர் குற்ற மாநாட்டில் பங்கேற்ற இலங்கை!

  • November 2, 2025
  • 0 Comments

வியட்நாமில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்ற மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில்  இரண்டு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அதில் இலங்கையும் ஒன்று. இலங்கையின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை இப்போது மூன்று மாதங்களுக்குள் ஒப்புதலுக்குத் தயாராகும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

நீருக்கடியில் மூழ்கும் உலகின் பெருநகரங்கள்!

  • November 2, 2025
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள நகரங்கள்  275 ஆண்டுகளில் நீருக்கடியில் மூழ்கும் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது. பாரிஸில் (Paris)  உள்ள சோர்போன் பல்கலைக்கழக (Sorbonne University) விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர்களின் கணிப்பு படி 2300 ஆம் ஆண்டளவில் அண்டார்டிகாவின் பனி 59 சதவீதம் வரை உருகுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நடந்தால் கடல் மட்டம் 10 மீற்றர் வரை உயரும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், ஹல் (Hull), கிளாஸ்கோ (Glasgow) மற்றும் பிரிஸ்டல் (Bristol)ஆகியவை நீரில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர்!

  • November 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. உள்துறை அலுவலகத்தின் உதவி தன்னார்வ திரும்பும் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஆலோசனையை தனிநபர்கள் பின்பற்றியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு தானாக வெளியேற விரும்புவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் விமான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. இருப்பினும், புதிதாக வெளிவந்த சான்றுகள், பணத்தை  பயன்படுத்திய சில சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்கள், நாட்டை விட்டு […]

error: Content is protected !!