உலகம் செய்தி

காட்டில் சடலமாக மீட்கப்பட்ட ஆஸ்திரிய சமூக வலைதள பிரபலம்

  • December 1, 2025
  • 0 Comments

ஆஸ்திரியாவைச்(Austria) சேர்ந்த ஸ்டெபானி பைபர்(Stephanie Piper) என்ற அழகு துறை பிரபலம் அவரது முன்னாள் காதலனால் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பிறகு குறித்த நபர் உடலை சூட்கேஸுக்குள் மறைத்து ஒரு காட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்டதாக ஆஸ்திரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பனை(makeup), பேஷன்(fashion) மற்றும் பாடும்(singing) உள்ளடக்கத்திற்காக அறியப்பட்ட ஸ்டெபானி பைபர் இறக்கும் போது அவருக்கு 31 வயது. நவம்பர் 23 அன்று ஒரு விருந்தில் இருந்து வீடு திரும்பிய பின்னர் பைபர் காணாமல் போயுள்ளார் என்று பைப்பரின் உறவினர்கள் […]

இலங்கை செய்தி

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்கள் அகற்றல்

  • December 1, 2025
  • 0 Comments

நேற்றைய தினம் வென்னப்புவவின் (Wennappuwa) லுனுவிலா (Lunuwila) பகுதியில் விமானப்படையைச் சேர்ந்த பெல் 212 (Bell 212)எனும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதை இன்று சம்பவ இடத்திலிருந்து அகற்றியுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காகச் சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. திடீரென லுனுவிலா பாலத்திற்கு அருகில், ஹெலிகாப்டர் கின் […]

உலகம் செய்தி

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனா குடும்பத்தினருக்கு புதிய தண்டனை

  • December 1, 2025
  • 0 Comments

ஷேக் ஹசீனா(Sheikh Hasina) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர், அவரது சகோதரி மற்றும் அவரது மருமகள், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் சித்திக்(Tulip Siddiqui) ஆகியோருக்கு புதிய தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. டாக்காவில்(Dhaka) உள்ள பர்பாச்சல்(Parbachal) நியூ டவுன் திட்டத்தின் கீழ் நிலங்களை ஒதுக்கீடு செய்ததாக கூறப்படும் வழக்கில், பதவி நீக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா(Sheikh Rehana) மற்றும் அவரது மருமகளும், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினருமான […]

இலங்கை

டித்வா புயலின் கோரம் – 390 பேர் மரணம்

  • December 1, 2025
  • 0 Comments

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 382,651 குடும்பங்களைச் சேர்ந்த 13,373,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுர இடையே தொலைபேசி உரையாடல்

  • December 1, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் பேரிடர் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த உரையாடலில் தித்வா(Ditwah) சூறாவளியை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மற்றும் பேரழிவுகளுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு இந்திய மக்கள் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் நிற்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் உதவிக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் […]

இலங்கை செய்தி

மீண்டும் நாட்டிடை கட்டியெழுப்ப புதிய குழு விபரம்: அரசு அறிவிப்பு

  • December 1, 2025
  • 0 Comments

இதன் நிர்வாகக் குழுவில் (Management Committee) அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. நிர்வாகக் குழுவில் இடம்பெறும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் பெயர், பதவிகள் பின்வருமாறு: பதவி உறுப்பினர் பெயர் தலைவர் (Chairman) டாக்டர். அனில் ஜயந்த பெர்னாண்டோ (Dr. Anil Jayantha Fernando) – தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கூட்டமைப்பாளர் (Convener) ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்குவதாக உறுதி: பிரித்தானியா

  • December 1, 2025
  • 0 Comments

‘திட்வாஹ் சூறாவளி’ (Cyclone Ditwah) காரணமாக ஏற்பட்ட அழிவிலிருந்து இலங்கை மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், பிரித்தானியா (BRITISH – UK) அவசர மனிதாபிமான உதவித்தொகையாக $890,000 (சுமார் £675,000) நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த உதவி பின்வரும் அமைப்புகளுடன் இணைந்து வழங்கப்படும்: செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை (United Nations in Sri Lanka) உள்ளூர் பங்காளர்கள் (Local partners) இந்த நிதியானது, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரப் பொருட்கள் […]

இலங்கை செய்தி

100 க்கு மேற்பட்ட வீதிகள் மூடப்பட்டன: வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு

  • December 1, 2025
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் காரணமாக, போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ள வீதிகளின் புதிய பட்டியலை வீதி அபிவிருத்தி அதிகார சபை (Road Development Authority – RDA) இன்று (டிசம்பர் 1, 2025) வெளியிட்டுள்ளது. வெள்ளம், மண்சரிவு, பாறைகள் சரிவு மற்றும் பேரிடர் தொடர்பான பிற ஆபத்துகள் காரணமாக நாடு முழுவதும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட பட்டியலின்படி, மூடப்பட்ட வீதிகளின் எண்ணிக்கையானது மாகாணங்களின் அடிப்படையில் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளன: மாகாணம் மூடப்பட்ட வீதிகளின் எண்ணிக்கை கிழக்கு மாகாணம் (Eastern […]

பொழுதுபோக்கு

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

  • December 1, 2025
  • 0 Comments

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆபத்தான சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு விடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பதுளை மாவட்டம் – ஊவா பரணகம சொரணாதோட்டம் எல்ல ஹப்புத்தளை ஹாலிஎல மீகஹகிவுல ஹல்தும்முல்ல வெலிமடை பசறை பண்டாரவளை லுணுகலை பதுளை கந்தேகெட்டிய கண்டி மாவட்டம் ஹதரலியத்த உடுநுவர குண்டசாலை பாததும்பர தும்ப்பனே மெததும்பர […]

இலங்கை செய்தி

வதந்திகளை பரப்புவர்களுக்கு எச்சரிக்கை: இலங்கை காவல்துறை

  • December 1, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்றப்பட்டுள்ள பேரழிவால் மக்கள் பெரும் துன்பத்தில் உள்ள இந்த இக்கட்டான சூழலில், பொய்யான அல்லது நெறிமுறையற்ற தகவல்களைப் பொறுப்பற்ற முறையில் பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இன்று (டிசம்பர் 01) பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் பேசிய காவல்துறைப் பேச்சாளர் உதவி அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் (ASP F. U. Wootler) அவர்கள் இது குறித்துப் பின்வரும் தகவல்களை வெளியிட்டார். பொதுமக்களிடையே பயத்தையும் பீதியையும் (fear and […]

error: Content is protected !!