இலங்கை செய்தி

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI – இந்திய துணை ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

  • April 19, 2026
  • 0 Comments

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களும் புலம்பெயர் இந்திய குடியுரிமை அட்டையை பெறும் வாய்ப்பை பெறுவார்கள் என இந்திய துணை ஜனாதிபதி சீ.பி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் காலி மற்றும் மாத்தளை மாவட்ட மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை இன்று (19) கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், “இன்று கொழும்பை வந்தடைந்தது முதல் புதிய உணர்வு ஏற்பட்டுள்ளது. அது பக்கத்து நாட்டுக்கு சென்றுள்ளதை […]

இலங்கை செய்தி

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை முதல் வழமைக்கு

  • April 19, 2026
  • 0 Comments

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள், நாளை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது..

உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கு இதுவரை ஈரானிய பேச்சுவார்த்தைக் குழு எதுவும் அனுப்பப்படவில்லையென தகவல்

  • April 19, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்புவது குறித்து ஈரான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “கடற்படை முற்றுகை தொடரும் வரை பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தைக் குழு அனுப்பப்படாது” என ஈரான் தரப்பு கூறியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை குறித்த டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு அமுலில் இருக்கும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறாது” என்று ஈரானிய குழு வலியுறுத்தியதாக தஸ்னிம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உலகம் செய்தி

போர் தொடர்பான பதிவுகள் – அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் குவைத்தில் கைது

  • April 19, 2026
  • 0 Comments

போர் தொடர்பான சமூக ஊடக பதிவுகளுக்காக அமெரிக்க–குவைத் பத்திரிகையாளர் அகமது ஷிஹாப்-எல்டின் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகக் கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 41 வயதான ஷிஹாப்-எல்டின், குவைத்தில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க சென்றிருந்த நிலையில், மார்ச் 2-ஆம் திகதிக்குப் பின்னர் அவர் இணையத்தில் எந்தப் பதிவும் இடவில்லை மற்றும் பொதுவெளியிலும் தோன்றவில்லையென நியூயோர்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ)  தெரிவித்துள்ளது. அவர்மீது தவறான தகவல்களைப் பரப்புதல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் […]

ஐரோப்பா செய்தி

சட்டங்களை மீறும்  நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க முடியாது : இஸ்ரேல்–ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை நிறுத்த ஸ்பெயின் வலியுறுத்தல்

  • April 19, 2026
  • 0 Comments

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது என்று குற்றம்சாட்டி, ஐரோப்பிய ஒன்றியம்–இஸ்ரேல் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரியுள்ளார். அண்டலூசியாவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஸ்பெயின் அரசு சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். “சர்வதேச சட்டங்களை மீறும்  நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க முடியாது” என்று அவர் கூறினார். இதனிடையே, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் […]

உலகம்

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் – ட்ரம்ப் மிரட்டல்!

  • April 19, 2026
  • 0 Comments

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்  ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்துள்ளது  எனக் கூறிய அவர்,  இது   போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரான் ஒரு பிரெஞ்சு கப்பல் மற்றும் ஒரு இங்கிலாந்து சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. ஈரான் […]

உலகம் செய்தி

ஈரான் போர்நிறுத்தத்தை மீறியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு

  • April 19, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில்  துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஈரான்   போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தத் தாக்குதல் ஒரு பிரெஞ்சு கப்பலும், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு சரக்குக் கப்பலையும் இலக்குவைத்து நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நீரிணையை மூடுவதற்கான ஈரானின் முடிவை விசித்திரமானது என விமர்சித்த […]

இலங்கை செய்தி

பிரதமர் மற்றும் இந்திய துணை ஜனாதிபதி இடையே சந்திப்பு

  • April 19, 2026
  • 0 Comments

நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (19) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து துணை ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தினர். பிரதமர் அலரி மாளிகையில் வழங்கிய மதிய விருந்துபசாரத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான  மரபுகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக் […]

இலங்கை

உச்சபட்ச வெப்பநிலை – மக்களின் கவனத்திற்கு!

  • April 19, 2026
  • 0 Comments

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் துறை வௌியிட்டுள்ள அறிவிப்பில்,  மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு நாளை (20) ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயல்படுவது வெப்பத் தசைப்பிடிப்புகளுக்கு […]

இலங்கை

மலேசியாவில் தீ விபத்து: 200 வீடுகளுக்கு சேதம்

  • April 19, 2026
  • 0 Comments

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்று (19) அதிகாலை இந்தத் தீ பரவியுள்ளது. இந்தத் தீ விபத்தினால் 89 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

error: Content is protected !!