உலகம் செய்தி

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை: முற்றுகையை நீக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தல்

  • April 24, 2026
  • 0 Comments

ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில், அந்த முற்றுகை போர் நிறுத்த ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க மீறல் என்று கூறினார். மேலும், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும்போது ஈரானின் உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவிடமிருந்து ஒரு யதார்த்தமான அணுகுமுறை […]

இலங்கை செய்தி

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்

  • April 24, 2026
  • 0 Comments

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள தரப்பினர், அது குறித்து அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறியப்படுத்தி, பதிவுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது, அன்னதானம் நடத்தப்படும் இடம் மற்றும் அது எவ்வகையான  என்பது குறித்த விபரங்களை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். […]

ஐரோப்பா

தொழிலாளர்களுக்கு வரி விலக்கு – ஜெர்மனியில் புதிய சட்டம்!

  • April 24, 2026
  • 0 Comments

தொழிலாளர்களுக்கான வரி விலக்கு,  நிவாரண ஊக்கத்தொகை மற்றும் எரிபொருள் தள்ளுபடி ஆகியவற்றை உள்ளடக்கிய  திட்டத்திற்கு ஜெர்மனியின் நாடாளுமன்றத்தின் கீழ்சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஈரான் போர்  காரணமாக அதிகரித்த பெட்ரோல் விலைகளின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தள்ளுபடியானது, டீசல் மற்றும் பெட்ரோலுக்கான எரிசக்தி வரியில் ஒரு லிட்டருக்கு சுமார் 0.17 யூரோக்கள் என்ற குறைப்பை வழங்குகின்றது. அத்துடன் இந்த சட்டத்தின்மூலம் தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளிடமிருந்து 1,000 யூரோக்கள் வரையிலான தன்னார்வ வரி விலக்கு […]

இலங்கை செய்தி

நேட்டோவிலிருந்து ஸ்பெயின் நீக்கப்படுமா?

  • April 24, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்பிலிருந்து ஸ்பெயினை நீக்குவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்றது என வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்டகனின் மின்னஞ்சலொன்றை மேற்கோள்காட்டியே இது தொடர்பில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தாலேயே ஸ்பெயின் இலக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது. எனினும், நேட்டோ அமைப்பின் விதிமுறைகளுக்கமைய ஒரு உறுப்பு நாட்டை நீக்குவதற்கோ அல்லது இடைநீக்கம் செய்வதற்கோ ஏற்பாடு இல்லை என தெரியவருகின்றது. அதேபோல மேற்படி தகவலை ஸ்பெயின் பிரதமரும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஈரான்மீதான […]

ஐரோப்பா

பிரித்தானிய அரசாங்கத்தின் மெத்தனபோக்கு – உயிரிழக்கும் கைதிகள்!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானிய சிறைச்சாலைகளில் தீவிபத்துகள் காரணமாக ஏராளமான கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகளில் சட்டப்படி தேவைப்படும் தானியங்கி தீ கண்டறியும் அமைப்புகள் (AFDs) இல்லாத காரணத்தால், இவ்வாறான தீ விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டுக்குள் அனைத்து சிறை அறைகளையும் தீ பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் தனது உறுதிப்பாட்டை நீதி அமைச்சகம் கைவிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 21,000-க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளில் இன்னும் அடிப்படை தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் […]

உலகம் செய்தி

ஈரானுடனான ஒப்பந்தம் அவசரம் இல்லை என்கிறது அமெரிக்கா

  • April 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரானுடன் ஒப்பந்தம்  மேற்கொள்ள எந்தவொரு அவசரமும் இல்லையென  அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த போது அவர் இதனை கூறினார் ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எங்களுக்கு உலகில் உள்ள அத்தனை நேரமும் உள்ளது, நாங்கள் ஒப்பந்தத்திற்காக ஆர்வமாக இல்லை என்று தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டத்தை கைவிடுவதை மையமாகக் கொண்ட எந்தவொரு உடன்படிக்கையும் தற்போது ஈரானின் கையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கருத்துகள்,  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

இலங்கை செய்தி

நெடுநாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி நெடுந்தீவில் போராட்டம்!

  • April 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி இன்று (24) மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர். மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை. குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை […]

உலகம் செய்தி

லெபனான்–இஸ்ரேல் போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமைதிக்கான வாய்ப்பா, சவாலா?

  • April 24, 2026
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதை லெபனான் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி, பெய்ரூட் அரசு, ஈரான் ஆதரவு பெற்ற  ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்குவதைத் தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இருப்பினும், போர்நிறுத்தம் மீறப்பட்டதாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் இராணுவமும் ஒருவரை ஒருவர் குற்றம் சமத்தியுள்ளன. மேலும், இஸ்ரேல் வலியுறுத்தும் […]

ஐரோப்பா

கடும் வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நிலவும் கடும் வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதீத வெப்ப நிலை, நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிய அளவிலான சேதங்களை விளைவிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய   ரயில்வே தண்டவாளங்கள் வளைதல், சாலைகள் உருகுதல் மற்றும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதியவர்கள், குழந்தைகள் உடல்நிலைக் குறைப்பாடுகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள அதேநேரம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!