ஐரோப்பா

ஆப்பிள் வாட்ச் ‘CO2- நடுநிலை தயாரிப்பு’ அல்ல : ஜெர்மன் நீதிமன்றம்

  • August 27, 2025
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் அதன் கைக்கடிகாரங்கள் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் பொருள் என்று ஜெர்மனியில் இனி விளம்பரப்படுத்த முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் பயனீட்டாளர்களைத் திசைதிருப்பியுள்ளதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் முன்வைத்த புகாரின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘கரிம வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் எங்கள் முதல் தயாரிப்பு’ என்று ஆப்பிள் அதன் கைக்கடிகாரங்களை இணையத்தில் விளம்பரப்படுத்தியது.ஆனால் அதற்குரிய அம்சம் அதில் எதுவும் இல்லை என்றும் ஜெர்மனியில் போட்டித்தன்மை சட்டத்தை அது மீறுகிறது […]

மத்திய கிழக்கு

காசா தாக்குதலில் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் மற்றும் AP செய்தியாளர்கள் ‘இலக்கு’அல்ல : இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர்

  • August 27, 2025
  • 0 Comments

காஸா மருத்துவமனை மேல் நடத்தப்பட்ட தாக்குதலின்போது உயிரிழந்த இரண்டு செய்தியாளர்கள்மீது குறிவைக்கவில்லை என்று இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மருத்துவமனைமீது தாக்குதல் நடத்துவதற்கான தீர்மானம் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் விசாரணைக்கு ராணுவத் தலைவர் உத்தரவிட்டிருப்பதாகவும் பேச்சாளர் சொன்னார். இம்மாதம் 25ஆம் தேதி காஸாவில் உள்ள நாசர் மருத்துவமனைமீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 செய்தி செய்தியாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். அந்த இரண்டு செய்தியாளர்களும் ராய்ட்டர்ஸ், அஸ்ஸோசியெடட் பிரெஸ் (AP), அல் […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 25 பேர் பலி!

  • August 27, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் தலைநகரில் இன்று (27.08) அதிகாலை பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காபூலின் அர்காண்டி பகுதியில் இவ் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தெற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து ஹெல்மண்ட் மற்றும் காந்தஹாரிலிருந்து பயணிகளுடன் பேருந்து வந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  இதனால் 27 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி தெரிவித்தார். […]

இந்தியா

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவு – 30 பேர் பலி, மழைக்கு மத்தியிலும் தொடரும் மீட்பு பணி!

  • August 27, 2025
  • 0 Comments

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா மாவட்டத்தில் உள்ள வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “மிகவும் துயரமானது” என்று கூறியதோடு, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​ஆகியோரிடம் பேசியதாகவும், மத்திய அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்ததாகவும் கூறினார். ம்பவம் நடந்த உடனேயே தேசிய […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் நியாயத்தன்மை மீதான கிரெம்ளின் தாக்குதல்களை நிராகரித்த டிரம்ப்

  • August 27, 2025
  • 0 Comments

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கும் ரஷ்ய அதிகாரிகளின் சமீபத்திய அறிக்கைகள், தோரணை காட்டுவதற்குச் சமம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று கூறினார். அவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அனைவரின் தோரணை எல்லாம் முட்டாள்தனம் – வெள்ளை மாளிகையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். ஞாயிற்றுக்கிழமை ஜெலென்ஸ்கியின் சட்டபூர்வமான தன்மையை கேள்வி எழுப்பிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் கருத்துக்கள் […]

பொழுதுபோக்கு

பராசக்தியைத் தொடர்ந்து பெரிய படங்களை தட்டித்தூக்கிய புதிய வில்லன்

  • August 27, 2025
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தின் மூலம் வில்லனாக மிரட்ட இருக்கிறார் ரவி மோகன். அந்தப் படத்தில் அவர் கேரக்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெரும் என்று பேசப்படுகிறது. அவருடைய அசத்தலான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு வரத் தொடங்கிவிட்டது. அடுத்து, தற்போது உருவாகி வரும் “பென்ஸ்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரவி மோகன் நடித்துள்ளார். அதுவே போதாதென, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள “கைதி 2” மற்றும் “விக்ரம் 2” படங்களிலும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கான ஈரானிய தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

  • August 27, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கான ஈரானிய தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த இரண்டு யூத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈரான் ஈடுபட்டதை ஆஸ்திரேலிய உளவுத்துறை அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் ஈரானிய தூதருக்கு நாட்டை விட்டு வெளியேற ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் சமூக நல்லிணக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் சமூகத்தில் முரண்பாடுகளை விதைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று […]

வட அமெரிக்கா

போருக்குப் பிந்தைய காசா குறித்த ‘பெரிய கூட்டத்திற்கு’ தலைமை தாங்கும் டிரம்ப் ; விட்காஃப்

  • August 27, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் காஸாவுக்கானப் போருக்குப் பிந்திய திட்டம் குறித்த கலந்துரையாடலை புதன்கிழமை (ஆகஸ்ட் 26) நடத்தவிருப்பதாக அமெரிக்கச் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்துள்ளார். “வெள்ளை மாளிகையில் அதிபரின் தலைமையில் பெரிய கூட்டம் ஒன்று நடைபெறவிருக்கிறது. நாங்கள் விரிவான திட்டத்தை வகுக்கிறோம்,” என்று விட்கோஃப் கூறினார். 2023 அக்டோபரில் காஸாவில் தொடங்கிய இஸ்ரேலின் போர் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா என்றும் விட்கோஃபிடம் கேட்கப்பட்டது. இவ்வாண்டின் முற்பாதியில் காஸாவை அமெரிக்கா கைப்பற்றி அங்குள்ள […]

விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு – வெளியான அறிவிப்பு

  • August 27, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து மட்டுமல்லாமல், அனைத்து வகையான கிரிக்கெட் […]

ஆஸ்திரேலியா

உலகம் முழுவதும் பரவும் பறவைக் காய்ச்சல் ஆஸ்திரேலியாவிலும் நுழையும் அபாயம்

  • August 27, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் பரவி வரும் H5 பறவைக் காய்ச்சல் ஆஸ்திரேலியாவிலும் நுழையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்குத் தயாராக உயிரியல் பாதுகாப்புத் திட்டத்திற்காக மத்திய அரசு 12 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொற்றுநோய் ஏற்பட்டால் விரைவான நடவடிக்கையை எளிதாக்கும் உபகரணங்களை வழங்குவதற்காக மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பறவைகளின் இடம்பெயர்வு ஒரு தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்றும், இது வனவிலங்குகள் மற்றும் விவசாயத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் வேளாண் அமைச்சர் ஜூலி […]

error: Content is protected !!