மத்திய கிழக்கு

இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை தயார்ப்படுத்தும் ஹிஸ்புல்லா

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹாசன் நசருல்லா எச்சரித்துள்ளார்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானின் தென் பகுதி எல்லையில் இருந்து அவ்வப்போது இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா, இஸ்ரேல் போா் அண்டை நாடுகளுக்கு விரிவடைவதை அமெரிக்காவால் மட்டும் தடுக்க முடியும். ஆனால் அதை அமெரிக்க செய்யவில்லை.

காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரையில், ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் மீதான தாக்குதல் தொடரும்.

இஸ்ரேல் எல்லையில் அதிநவீன புர்கான் ராக்கெட்டை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. அரை டன் வெடி மருந்து ஏற்படுத்தும் பாதிப்பை இந்த ராக்கெட் ஏற்படுத்தியது. மேலும் புதிய நவீன ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.