உலகம்

ஹமாஸ் அமைப்பின் கணக்குகளை முடக்க போவதில்லை; விளக்கமளித்துள்ள டெலிகிராம் CEO

ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கப்போவது இல்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய இணையதளங்கள் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கி உள்ளது.

அந்த வகையில் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்கள் ஹமாஸ் அமைப்பினரின் சமூக வலைதளங்களை முடக்கி வருகின்றனர்.இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கப்போவது இல்லை என டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

80 கோடி பயனர்களை கொண்டுள்ள டெலிகிராம் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து அந்த நிறுவனத்தின் CEO பவேல் டுரோவ் தெரிவித்துள்ள தகவலில், ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை டெலிகிராம் முடக்கப்போவது இல்லை.

ஏனென்றால் இஸ்ரேலின் ஆஷ்கெலான் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு டெலிகிராம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை தெரிவித்து இருந்தனர்.

அந்த எச்சரிக்கை செய்தி மூலம் தான் பல உயிர்கள் உயிர் பிழைத்தனர். ஒருவேளை ஹமாஸ் அமைப்பினரின் கணக்குகளை முடக்கி இருந்தால் அன்று பல அப்பாவி மக்கள் உயிரிழந்து இருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content