இலங்கை

திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து ஆளுநர் செந்தில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் -இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண ஆளுநர் திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து எடுத்த ஒரு தலைபட்சமான முடிவு இம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் உடன் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக திருகோணமலை மாவட்ட மீனவ குழுக்களுக்கிடையில் நிலவும் முருகல்நிலை தொடர்பாகவும், அது குறித்து ஆளுநர் எடுத்த தீர்மானம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

சுருக்குவலையைப் பொறுத்தவரை அனுமதிக்க பட்ட சுருக்கு வலை, அனுமதிக்கப்படாத சுருக்கு வலை என இரண்டு வகையான சுருக்கு வலைகள் உள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உள்ளது.இதில் சட்டரீதியாக அனுமதி பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலை மூலம் கிண்ணியா, மூதூர், திருகோணமலை, நிலாவெளி, இறக்கக்கண்டி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை, வெருகல் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 5000 க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் ஆளுநர் செந்தில் தொண்டமான்! - VTN News

எனினும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலைக்கும் அனுமதி பத்திரம் வழங்க முடியாத சுருக்கு வலைக்கும் வித்தியாசம் அறியாமல் ஆளுநர் தற்போது சுருக்கு வலை என்பது சட்டவிரோதமான ஒன்று என்ற நோக்கில் எடுத்த ஒரு தலைபட்ச முடிவு திருகோணமலை மாவட்ட சிறுபான்மை மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை இல்லாமலாக்கும் முயற்சியாக உள்ளது.இங்கு இரண்டு மீனவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவே முருகல் நிலை ஏற்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரண்டு குழுக்களையும் அழைத்து இரு பக்க நியாயங்களையும் கேட்ட பின்பே தீர்மானத்திற்கு வர வேண்டும்.

ஆனால் கிழக்கு மாகாண ஆளுநர் இதில் ஒரு குழுவினரின் கருத்தைக் கேட்டே இந்த மீன்பிடி தடை தீர்மானத்திற்கு வந்துள்ளார். இது குறித்து அவரை நேரில் சந்தித்து விடயத்தை தெளிவு படுத்த (நேற்று வியாழக்கிழமை) பல தடவை முயற்சித்த போதும் அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. திருகோணமலை மாவட்டத்தைப் பொருத்தவரை மீன் நுகர்வில் 50 வீதத்துக்கு அதிகமானவை சுருக்கு வலை மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. சாதாரண மீனவக் குடும்பங்கள் இந்தத் தொழிலேயே தங்கியுள்ளன.

எனவே இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகான ஆளுநர் இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்டு அறிந்து பூரண தகவல்களை பெற்ற பின்னர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நியாயமானதாக இருக்கும். ஆளுநரின் இந்த நடவடிக்கை இம்மீனவக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இது குறித்து ஆளுநர் மீள் பரிசீலனை செய்து உடன் நியாயமான தீர்மானத்திற்கு வர வேண்டும். இன்றேல் எதிர்காலத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பு ஒன்றை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content