ஐரோப்பா

தங்க சுரங்க விவகாரம் : ருமேனியாவிற்கு கிடைத்த பாரிய வெற்றி!

கிழக்கு ஐரோப்பிய நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கத்தைத் திறக்கும் திட்டத்தில் தோல்வியடைந்ததற்காக, கனேடிய சுரங்க நிறுவனத்திடம் நஷ்டஈடு கோரி பல வருடங்களாக நீடித்த சட்ட மோதலில் ருமேனிய அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய தங்க வைப்புகளைக் கொண்ட மலைப்பாங்கான மேற்குப் பகுதியான ரோசியா மொன்டானாவில் சுரங்கத் திட்டத்தில் 20% பங்குகளை வைத்திருந்த ரோமானிய அரசிடம் இருந்து கேப்ரியல் ரிசோர்சஸ் $4.4 பில்லியன் (4 பில்லியன் யூரோக்கள்) இழப்பீடு கோரியது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 2014 ஆம் ஆண்டு முதல் வாஷிங்கடனை தளமாகக் கொண்ட சர்வதேச மையம் நடத்தி வந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ருமேனியாவின் பிரதம மந்திரி மார்செல் சியோலாகு, ருமேனிய குடிமக்கள் அதிக செலவுகளால் சுமையாக இருப்பது நியாயமற்றது என்று கூறினார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!