பொழுதுபோக்கு

தினம் தினம் வேதனையில் துடிக்கும் காஜல்! நெகிழ்ச்சியான பதிவு

நாள்­தோ­றும் தன் மகனை விட்டுவிட்டு படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பும்போது தன்­ம­னம் வேதனை­யில் துடிப்­ப­தா­கச் தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்­வால் தெரிவித்துள்ளார். இதற்­காக பெற்ற மகனை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தாக யாரும் கரு­தி­வி­டக் கூடாது என்­றும் தன் மக­னுக்கு முன்னால் ஒரு பல­மான தாயாக நிற்­ப­தையே தாம் விரும்­பு­வ­தா­க­வும் அவர்­ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார். “இன்­னும் பச்சிளம் குழந்தை­யாக உள்­ள என்­ மக­னுக்­காக உரிய நேரத்தை ஒதுக்­கு­கி­றேன். அன்பைப் பகிர்­வ­தி­லும் குறை வைப்­ப­தில்லை. என் மக­னின் தேவை­கள் நிறை­வே­று­வதை உறுதி செய்­வ­து­டன், எனது திரைப்­பட பணி­க­ளை­யும் உரிய வகை­யில் திடட்­மிட்­டுக் கொள்­கி­றேன். “யார் என்ன நினைத்­தா­லும் எனக்­குக் கவ­லை­யில்லை. முதன் முறை­யாக என் மகனை மார்­போடு அணைத்­த­போது நன்­றாக வளர்க்க முடி­யுமா எனப் பயந்­தேன். ஆனால் எல்­லா­வற்­றை­யும் மெல்ல மெல்ல கற்­றுக்­கொண்டு வரு­கி­றேன். குழந்தை வளர்ப்பை முன்­வைத்து என்­னைச் சிலர் கேலி­யும் கிண்­ட­லும் செய்­கின்­ற­னர். அவர்­க­ளைப் பற்றி நான் கவ­லைப்­ப­டு­வ­தில்லை,” என்­கி­றார் காஜல் அகர்­வால். இதேவேளை காஜல் அகர்வால் அண்மையில் கண் அழகு தொடர்பான புதிய படைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி பெண் தொழிலதிபரானமை குறிப்பிடத்தக்கது.
(Visited 27 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content