செய்தி மத்திய கிழக்கு

ஆசிரியர்களுக்கான குடும்ப விசா!!! குவைத் அரசு சூப்பர் ஆஃபர்

முழு உலகத்தின் கவனமும் இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 7ம் திகதி தொடங்கிய போர் இன்னும் தொடர்கிறது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி உள்ளே நுழைந்து பணயக்கைதிகளை பிடித்து தாக்குதல் நடத்தியது.

பதிலுக்கு இஸ்ரேலிய அரசு போரை அறிவித்தது. காசா பகுதியில் இதுவரை 2,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 10,000 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 3,500 பேர் காயமடைந்தனர்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை இஸ்ரேல் மற்றும் அதை ஆதரிக்கும் எண்ணெய் வளம் கொண்ட நாடுகளால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே நிலவுகிறது.

யுத்தம் எப்போது முடிவடையும் என்ற பதற்றம் ஒருபுறமிருக்க, அங்கு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.

குவைத் அரசு திட்டம்

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூரமான கொலைகள் மற்றும் தப்பியோடிய அகதிகளுடன் போர்க்களம் இரத்தத்தால் நிறைந்துள்ளது.

இந்நிலையில் குவைத் அரசு ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருகிறது.

குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு

அதாவது, குவைத்தில் பணிபுரியும் பாலஸ்தீன ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்து வந்து அவர்களுடன் தங்குவதற்கு குடும்ப விசா வழங்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வர முடியாது. குவைத்தில் பணிபுரியும் ஆண், பெண் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் அழைத்து வரலாம்.

பாலஸ்தீனிய ஆசிரியர்கள்

மனிதாபிமான அடிப்படையில் இத்தகைய சலுகை வழங்கப்படுவதாக குவைத் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு முக்கியமான பின்னணி உள்ளது.

அதாவது, குவைத்தில் வசித்து வரும் பாலஸ்தீன ஆசிரியர் அரீஜ் குனன், காசா பகுதியில் நடந்த தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

உயர்கல்வித்துறை எடுத்த முடிவு

குவைத்தின் உயர்கல்வி அமைச்சர் அடெல் அல் மானே ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

காசா மற்றும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உடனடியாக உதவ முடிவு செய்தது.

காசா பகுதி மற்றும் மேற்குக் கரையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆசிரியர்கள் தற்போது குவைத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி