ஐரோப்பா

ஐரோப்பாவில் கடும் வெப்பம் – 1300 பேர் உயிரிழப்பு

ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்ப அலை உலுக்கி வருகிறது.

இந்நிலையில் இந்த வெப்ப அலை காரணமாக இதுவரை 1300 பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், “ஐரோப்பாவில் நிலவிய அதிக வெப்பநிலையுடன் தொடர்புடைய” 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.

“வெப்ப அழுத்தம் பெரும்பாலும் ‘மௌனக் கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது – மேலும் ஐரோப்பிய வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் இந்த வெப்பநிலைகளுக்காகக் கட்டப்படவில்லை,” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடும் வெப்பம் தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்ததால், ஜெர்மனி, போலந்து மற்றும் செக் குடியரசு உட்பட கண்டம் முழுவதும் நேற்றைய தினம் சாதனை அளவிலான வெப்பநிலை பதிவாகியது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்