இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகில் பதிவான நிலநடுக்கம்!!! சுனாமி அபாய எச்சரிக்கை

இலங்கை அமைந்துள்ள இந்திய – அவுஸ்திரேலிய தட்டு எல்லையில் மேலும் பாரிய அளவிலான நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நேற்று (11) அதிகாலை 1.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்கு ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியரான புவியியலாளர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக காணப்பட்டது.

இதன்படி, கடந்த 10 மணித்தியாலங்களில் இந்தோனேசியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் உள்ள நிலநடுக்கத் தகடு மற்றும் இந்திய – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தகடுகளில் ரிக்டர் அளவுகோலில் 4க்கும் அதிகமான 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த நிலநடுக்கங்களால் நாட்டுக்கு சுனாமி ஆபத்து ஏதும் இல்லை. கிழக்கு கடற்கரை அருகே கடலில் இதுபோன்ற அதிர்வுகள் ஏற்பட்டால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது.

இலங்கை இந்திய – அவுஸ்திரேலிய பீடபூமியில் அமைந்துள்ளதாகவும், அது தற்போது பிரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பூமியின் உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

தெற்கு அரைக்கோளத்தில் குறிப்பிட்ட முறைப்படி ஏற்படும் அந்த நிலநடுக்கங்களின்படி எதிர்காலத்தில் பல நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறிய நிலநடுக்கங்களுக்கு இலங்கை மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் பாரிய அளவிலான நில அதிர்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் புவியியலாளர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content