ஐரோப்பா

ஜெர்மனியில் மருத்துவரின் அதிர்ச்சி செயல் அம்பலம்

ஜெர்மனியில் இருதயவியல் மருத்துவர் (cardiology specialist) ஒருவர் கைது செய்யப்பட்டார் பேர்லின் அரச சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட 55 வயதான நபர், தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு தெரிந்தே அதிக அளவு மயக்க மருந்தை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்ட டோஸ்கள் மிக அதிகமாக இருந்ததால் தீவிர சிகிச்சை நோயாளிகள் இறந்ததாக அறியப்பட்டுள்ளது.

மருத்துவமனை தரப்பில் இருந்து வந்த முறைப்பாட்டின் பேரில் சட்டவாளர்கள் இந்த விசாரணையைத் தொடங்கினர்.

சட்டவிரோதமான மருத்துவ நடவடிக்கை மரணத்தை விளைவிப்பதாக அநாமதேய குறிப்பு கிடைத்ததாக மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணரை பணிநீக்கம் செய்வதோடு, பாதிக்கப்படக்கூடிய மக்கள் குழுக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மருத்துவமனை கூறியது.

மருத்துவ அறிக்கையின் பின்னர் அவசர சந்தேகத்தின் அடிப்படையில் குறித்து மருத்துவரின் கைது இடம்பெற்றுள்ளது.

மயக்க மருந்தின் அதிக அளவு மருத்துவ ரீதியாக நியாயமானதாக இருந்திருக்கும் என்பதை நிராகரிக்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு நிபுணர் மதிப்பீட்டின்படி, ஆய்வு செய்யப்பட்ட நான்கு இறப்புகளில் குறைந்தது இரண்டில் இது இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இது தெளிவாகத் தெரிந்திருக்கும் என்றும் கூறியது.

கைது செய்யப்பட்ட மருத்துவர் நகரின் ரியகார்டின் (Tiergarten) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதி முன் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்திருந்தனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content