பொழுதுபோக்கு

பிரபல இயக்குனருக்கு மாரடைப்பு… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும், த்ரில்லர் மற்றும் திகில் நிறைந்த அற்புதமான படைப்புக்களை சீரியல்களாகவும், திரைப்படமாகவும் இயக்கி ரசிகர்கள் மனதை ஆற் கொண்டவர் இயக்குனர் நாகா.

இவர் இயக்கிய சீரியல்கள் பல, காலத்தாலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத சில அற்புதமான படைப்புகளாகும்.

குறிப்பாக சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, மர்ம தேசம், ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன், போன்ற சீரியல்களை இயக்கியுள்ளார்.

மேலும் வெள்ளித்திரையில் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் நந்தா மற்றும் சாயாசிங் நடிப்பில் வெளியான ‘ஆனந்தபுரத்து வீடு’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இயக்குனர் என்பதை தாண்டி, சில திரைப்படங்களில் சினிமேட்டோகிராபராகவும் பணியாற்றி உள்ளார். தற்போது இவர் பிரபல ஓ டி டி தளம் ஒன்றிற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸிங் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சரிந்து விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பட குழுவினர் அவரை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து இயக்குனர் நாகாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சைகள் அளித்துள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content