ஆசியா

ஜப்பானில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அருகில் நின்ற நால்வர் மரணம் – வெளிவரும் காரணம்

ஜப்பானில் கரியமில வாயுவை நுகர்ந்து குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சவப்பெட்டிகளில் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் காய்ந்த பனிக்கட்டியிலிருந்து (டிரை ஐஸ்) வெளியான கரியமில வாயுவை நுகர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களின் உடல்கள் இருந்த சவப்பெட்டிகளுக்கு மிக அருகே அதிக நேரம் நின்றதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 40லிருந்து 70 வயதுக்கு உட்பட்டவர்களாகும். அவோமி, ஒக்கினாவா நகரங்களில் உள்ள வீடுகள், மியாகி, மியாஸாக்கி நகரங்களில் இருக்கும் இறுதிச் சடங்கு நிலையங்கள் ஆகியவற்றில் 2018லிருந்து 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்கள் மேலும் காற்றோட்ட நிலையில் இருப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்று தலைநகர் தோக்கியோவில் இயங்கும் அகில ஜப்பானிய இறுதிச் சடங்கு இயக்குநர்கள் ஒத்துழைப்பு உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்தன.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content