இலங்கை

வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் ஆபத்து – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

டெங்கு நோய் நிவாரணியாக Non-steroidal anti-inflammatory drugs வகை வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் மரணங்கள் சம்பவிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஊக்குவிப்பு செயலகம் இது தொடர்பில் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கடும் காய்ச்சல் மற்றும் அதிக உடல்வலி மற்றும் பாரிய தலைவலி காரணமாக மக்கள் மேற்படி வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு வருவதாகவும் அதனால்

சில மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அச்செயலகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுபோன்ற வலி நிவாரணிகளை நோயாளர் பெற்றுக் கொள்வதானால், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த வகையிலும் அதனை உட்கொள்ள வேண்டாமென்றும் சுகாதாரத் துறை எந்த விதத்திலும் அதற்கான அனுமதியை வழங்காது என்றும், அந்தச் செயலகம் அறிவித்துள்ளது.

டயிய்லோபேடேக் சோடியம், இப்யுப்ரோபன், மேபேநமிக்எயிட், இன்டோமெதசின், நெப்ரொக்ஸ் சென், செலேகொக்சிப், எஸ்பிரின், ஆகிய மருந்துகள் பல்வேறு வர்த்தகப் பெயர்களில் வலி நிவாரணிகளாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அமைந்தாலும் டெங்கு நோயின் போது அவற்றைப் பாதிவித்தால் மோசமான நிலை உருவாகுமென்றும், மரணமும் சம்பவிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களுக்கு முதலில் சிறந்த ஓய்வைப் பெற்றுக் கொள்வது முக்கியம். அத்துடன் நீர் ஆகாரத்தை அதிகரிப்பது சிறந்த பலனளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அச்செயலகம் தேவைப்பட்டால் பெரசிட்டமோல் மாத்திரையை மாத்திரம் உபயோகப்படுத்துமாறும் கேட்டுள்ளது.

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமானால், பொருத்தமான மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும் அல்லது உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவது சிறந்தது என்றும் அச்செயலகம் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content