மே – 22 வரை தொடரும் ஆபத்து : இந்தியாவின் வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கை மே 22 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் அதி உச்ச வெப்பநிலை பதிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, இயல்பான வெப்பநிலையை விட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதியில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமாக உயர்ந்தால், அது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகக் கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.





