இலங்கை செய்தி

இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் புயல் – போக்குவரத்து பெரிதும் பாதிப்பு

புயல் காரணமாக இங்கிலாந்தில் டெவோன் (Devon) மற்றும் கார்ன்வால் (Cornwall) பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வீடுகள், வீதிகள் மற்றும் ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

டெவோனில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கைகளும், கார்ன்வாலில் இரண்டு வெள்ள அபொய எச்சரிக்கைகளும் தற்போது அமலில் உள்ளன.

வெள்ளம் காரணமாக, எக்ஸிடெர் செயின்ட் டேவிட் (Exeter St Davids) – பார்ன்ஸ்டேபிள் (Barnstaple) இடையேயான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், எக்ஸிடெர் செயின்ட் டேவிட் – ஓகேஹாம்ப்டன் (Okehampton) வழித்தடம் வார இறுதியில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாற்றுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லிஸ்கார்ட் (Liskeard) – லூயி (Looe) மற்றும் பார் (Par) – நியூகுவே (Newquay) இடையேயான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை