இலங்கை

தித்வா சூறாவளி – 800 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்!

தித்வா சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 800ஐ நெருங்கியிருக்கும் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 481 பேர் உயிரிழந்துள்ளதுடன், முந்நூறுக்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல்போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  மாயமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 800ஐ நெருங்கியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பேரிடர் மீட்புக் குழுக்கள் பல நாட்களாக துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உடல்களை மீட்டு வருகின்றனஇ அதே நேரத்தில் தற்காலிக தங்குமிடங்களில் உள்ள குடும்பங்கள் பேரிடரின் போது அடித்துச் செல்லப்பட்ட அன்புக்குரியவர்களின் செய்திக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.

சில இடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அணுகல் வழங்கப்பட்டவுடன் அந்த இடங்களை பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்