ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சைபர் தாக்குதல் – முடங்கிய துறைமுகங்களின் செயல்பாடுகள்

ஆஸ்திரேலியா முழுவதும் பல துறைமுகங்களில் செயல்பாடுகள் சீர்குலைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு சம்பவத்தையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக ஆபரேட்டரான டிபி வேர்ல்டின் தகவல் அமைப்பை தாக்கியதாகக் கூறப்படும் சைபர் தாக்குதல் காரணமாகும்.

இதனால், சிட்னி – மெல்பேர்ன் – பிரிஸ்பேன் மற்றும் ஃப்ரீமண்டில் துறைமுகங்களில் உள்ள அவர்களது அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் எந்தவித அனுமதிப் பணிகளும் நடைபெறவில்லை.

இதற்கு ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு ஆணையமும் ஆதரவு அளித்து வருவதாகவும், விரைவில் அதை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித