செய்தி

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகிறது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, 11,070 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹமாஸ் பயங்கரவாதக் குழு 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை சிறைபிடித்தனர். அவர்களை விடுவிக்க இஸ்ரேல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் தங்களிடம் இருக்கும் சில வெளிநாட்டு பிரஜைகளுடன் பல பணயக்கைதிகளையும் அடுத்த சில நாட்களில் விடுவிப்போம் என்று ஹமாஸ் கூறியது. அதன்படி, இஸ்ரேலும் ஹமாஸும் தற்போது பணயக்கைதிகளை விடுவிக்கும் இரண்டு திட்டங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதாவது குறைந்த எண்ணிக்கையிலான மக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 அல்லது அதற்கு மேற்பட்ட பொதுமக்களை விடுவிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முதலில், ஹமாஸ் 10 முதல் 20 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.

இதில் இஸ்ரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்குவர். இதற்கு ஈடாக இஸ்ரேல் ஒரு சிறிய இடைநிறுத்தம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த முன்மொழிவுகளுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், அதைத்தொடர்ந்து சுமார் 100 பொதுமக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content