இலங்கை

இலங்கையில் 2 நாட்களின் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் இன்று தங்க விலை சற்று குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 317,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று 1,000 ரூபாயால் குறைந்து 316,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 316,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 290,000 ரூபாயாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,525 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,250 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,625 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்