உலகம் செய்தி

புளோரிடாவில் மதுபானக் கடைக்கு வெளியே மக்கள் கூட்டம் மீது மோதிய கார் – நால்வர் மரணம்

புளோரிடாவின்(Florida) டம்பாவில்(Tampa) ஒரு மதுபானக் கடைக்கு வெளியே மக்கள் கூட்டத்தினர் மீது கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

டம்பாவில் உள்ள நெடுஞ்சாலையில் பொறுப்பற்ற முறையில் ஒட்டி செல்லப்பட்ட காரை காவல்துறையினர் நிறுத்த முயன்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் 11 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புளோரிடாவின் டேட்(Dade) நகரத்தைச் சேர்ந்த 22 வயதான சைலாஸ் சாம்ப்சன் என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி