ஆசியா

தாய்லாந்தில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்களால் கட்டியெழுப்பட்ட புத்தர் கோவில்!

தாய்லாந்தில் பல லட்சம் பீர் பாட்டில்களை கொண்டு புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டு இருப்பது அனைவரும் ஆச்சரியத்தை வழங்கியுள்ளது.

தாய்லாந்தின் சிகாகெட் மாகாணத்தில் குன் ஹான் மாவட்டத்தில் இந்த புத்தர் கோவில் அமைந்துள்ளது. வாட் பா மஹா செடி கேவ் என்று அழைக்கப்படும் இக் கோவில் கிரேட் கிளாஸ் பகோடாவின் வனப்பகுதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோவில் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த கோவில் வளாகம் முழுவதும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பீர் பாட்டில்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.கோவில் கட்டிடம் சிமெண்ட் கலவைகளால் கட்டப்பட்டது என்றாலும், இந்த பீர் பாட்டில்கள் அதன் மேல் புறத்தில் அழகு படுத்தும் விதமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

Wat Pa Maha Chedi Kaew (Thailand) : The unique Temple of a Million Bottles  in Southeast Asia - Asean Records World

இந்த கோவில் வழிபாட்டு தலமாக மட்டும் இல்லாமல், மறுசுழற்சி, நிலைத்தன்மை மற்றும் மனித படைப்பாற்றலுக்கு சிறந்த கருது கோளாக விளங்குகிறது.இந்த கோவிலின் படிகட்டுகளில் மட்டும் இல்லாமல் தூண்கள், பொது குளியலறைகள், பூஜை அறைகள், தண்ணீர் டேங்க் மற்றும் சுடுகாடு கூட பீர் பாட்டில்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு புத்த பிக்ஷு ஒருவர் பீர் பாட்டில்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். அவர் சேகரித்து பீர் பாட்டில்களை கொண்டு முதலில் கோவிலின் முதன்மை கட்டிடத்தின் வடிவமைப்பு தொடங்கியுள்ளது.அதனை தொடர்ந்து கோவிலின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content