இத்தாலியில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!!! இருவர் கைது!
இத்தாலியில் நான்கு புலம்பெயர்ந்தோர் காருக்குள் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து மூன்று ஆப்கானியர்களும் பாகிஸ்தான் நபர் ஒருவரும் காரினுள் வைத்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நபர் ஒருவர் அவர்களை காருக்குள் வைத்து கதவை மூடும் காட்சி பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




