இந்தியா செய்தி

பரபரப்பை ஏற்படுத்திய பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அனிமேஷன் காணொளி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அனிமேஷன் காணொளி வெளியான ஒரே நாளில் அகற்றப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் வெறுப்புப் பேச்சு மற்றும் விமர்சனம் காரணமாக இந்த காணொளி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணொளி அகற்றப்பட்டாலும், ஏனைய சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

இந்த காணொளி நிச்சயமாக பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றபோதிலும், சில அதீத ஆர்வமுள்ள பி.ஜே.பி. ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டதாக குறிப்பாக கவனத்தை ஈர்த்துள்ளது.

பல ஜனநாயக நாடுகளில் பிரசாரத்தின் போது இவ்வாறான சம்பவங்கள் நிகழலாம் எனவும், இது பொதுவாக அரசியல் கட்சி ஒன்றின் உத்தியோகபூர்வ பிரச்சார காணொளி அல்ல எனவும் தெளிவுபடுத்தும் அறிக்கைகள் வெளியிடப்படுவதை காணமுடிகிறது.

ஆகவே, இந்தக் காணொளியை பாரதிய ஜனதா கட்சி ஏற்காததை இந்த அறிக்கைகள் வெளிக்காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதற்கு நேர் மாறாக, பி.ஜே.பி வெளியிட்ட காணொளியின் உள்ளடக்கம் உண்மையில் இராஜஸ்தானில் கடந்த மாதம் பிரச்சார நடவடிக்கைகளின் போது மோடி ஆற்றிய உரையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த காணொளி சில வல்லுநர்களால் பழைய பாணி பிரசார பேரணிகள் மற்றும் நிகழ்நிலை உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான இருவழி உறவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்நிலை உள்ளடக்கத்திற்கான தேவையும், அரசியல் கட்சிகள் எவ்வாறு வெகுஜன பிரசார பேரணிகளை நடத்துகின்றன என்பதை வடிவமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை நிகழ்நிலை தளங்களின் பயன்பாடு பரவலாக காணப்படுகிறது. பில்லியன் கணக்கான மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் நவீன கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களாக உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் “வாட்ஸ்அப் தேர்தல்” என அழைக்கப்பட்டது.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content