பொழுதுபோக்கு

அஜித்தை தரக்குறைவாக பேசிய வடிவேலு.. 20 வருட பகைக்கு இதுதான் காரணமா?

நடிகர் அஜித்துக்கும் நடிகர் வடிவேலுக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பிரச்சனையால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதை தவிர்த்து வருகின்றனர்.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி சினிமாவில் முன்னுக்கு வந்தவர் தான் அஜித். தெலுங்கில் வெளிவந்த பிரேம புஷ்தகம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அஜித்.

நடிகர் அஜித்தும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் 2002-ம் ஆண்டுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக படங்களில் இணைந்து நடித்து வந்தனர். ஆனால் கடந்த 2002-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் வெளிவந்த ராஜா படம் தான் அஜித்தும் வடிவேலுவும் கடைசியாக இணைந்து நடித்த படம்.

அப்படத்தில் அவர்கள் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் வேறலெவலில் ஹிட்டாகின. ஆனால் அப்படத்துக்கு பின்னர் அஜித்தும் வடிவேலுவும் கூட்டணி சேர்ந்து நடிக்கவே இல்லை. 20 ஆண்டுகளாக இந்த கூட்டணி மீண்டும் இணையாததற்கு ராஜா படத்தின் போது ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்படுகிறது.

ராஜா படத்தின் கதைப்படி அஜித்தின் தாய்மாமாவாக வடிவேலு நடித்திருப்பார். அந்த கேரக்டரின் படி அவர் அஜித்தை படம் முழுக்க போடா வாடா என்று தான் அழைப்பார். அதே பாணியை வடிவேலு ஷூட்டிங் முடிந்த பின்னும் கடைபிடித்தது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

இதனால் இயக்குனரிடம் இதுபற்றி அஜித் தனது அதிருப்தியை கூறி இருக்கிறார். இயக்குனரும் வடிவேலுவிடம் இந்த விஷயத்தை கூற, அவர் அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் மீண்டும் அஜித்தை மரியாதை இன்றி அழைத்திருக்கிறார்.

இதனால் அப்படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வடிவேலு உடன் பேச்சைக் குறைத்துக் கொண்ட அஜித், இனி உன் சாவகாசமே வேண்டாம் என்றும் முடிவெடுத்தாராம். அப்படத்துக்கு பின்னர் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்கள் வடிவேலு பற்றி பேச்சை எடுத்தால் அவர்களுக்கு நோ சொல்லி திருப்பி அனுப்பிவிடுவாராம் அஜித்.

ராஜா படத்தின் போது நடந்த இந்த பிரச்சனையால் தான் அஜித் – வடிவேலு காம்போ கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து பணியாற்றவே இல்லை என கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content