இலங்கை

முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான வயது எல்லை நிர்ணயம்

இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40ஆக உயர்த்தப்பட்டலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹெவாகே தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்துரைக்கும்போது ஹெவாகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்காலம், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க ஒரு இளம் தலைமுறையை உருவாக்குவதைப் பொறுத்தது.

நாட்டை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை இன்றியமையாது என்றும் அவர் கூறினார்.

எனவே, அரசாங்கம் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்