பொழுதுபோக்கு

ரொமான்ஸ் செய்யும் கனவுக் கன்னியின் மகள்.. தீயாய் பரவும் போட்டோ

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ராதா, அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

பத்து ஆண்டுகாலம் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை ராதா , ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா நாயர், துளசி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அதிகளவிலான ரசிகர்களை பெற்ற கார்த்திகா நாயர்.

தனது முதல் படத்தைத் தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் மகரம்ஞ்சு, தெலுங்கில் ஜோஷ், கன்னடத்தில் பிரிந்தாவனா, ஆகியப் படங்களில் நடித்த கார்த்திகாவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையிலான எந்த படமும் வெற்றிப்படங்களாக அமையவில்லை.

ஒரு காலத்தில் சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகையின் மகளாக இருந்த போதும் எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், நடிகை கார்த்திகா நாயர் தனது அப்பாவின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தற்போது கார்த்திகா தனது வருங்கால கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா…நடக்கட்டும் நடக்கட்டும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content