பொழுதுபோக்கு

திடீரென திருமணக் கோலத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகர் ஜெய்!

நடிககை பிரக்யா நாக்ராவை திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படத்தை நடிகர் ஜெய் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்துவிட்டு திடீர் திருமணமா என ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாற்பது வயதைக் கடந்தும் தமிழ் சினிமாவின் பேச்சுலர் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். ‘எப்போது திருமணம்?’ என்ற கேள்வி வந்தாலே சிரித்து மழுப்புபவர் இப்போது நடிகை பிரக்யா நாக்ராவுடன் திருமணம் முடிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பஞ்சாபியைச் சேர்ந்த பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’, ‘என்4’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கழுத்தில் புது தாலி அணிந்திருக்கும் பிரக்யா, அருகில் கையில் பாஸ்போர்ட்டுடன் ஜெய்யும் இருக்க ‘கடவுளின் ஆசியோடு புது வாழ்வு தொடங்கி இருக்கிறது!’ என புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

ஜெய்யும் இந்தப் புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் இருவருக்கும் திடீர் திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர். இது நிஜத்தில் நடந்த திருமணமா அல்லது பட புரமோஷனா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு முன்பு நடிகை அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஜெய். பின்பு, இருவரும் நண்பர்கள் தான் என அஞ்சலி விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content