ஐரோப்பா

ஜெர்மனியில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனியின் மூதாட்டி ஒருவர் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எஸன் நகரத்தில் முதலாம் திகதி 86 வயதுடைய மூதாட்டி ஒருவர் வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த 86 வயதுடைய மூதாட்டியானவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

குறித்த மூதாட்டியின் உறவினர்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

இதன் பொழுது இவருடன் தெடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியதால் அச்சம் கொண்ட உறவினர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது இரத்த வெள்ளத்தில் இறந்து காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த உறவினர் பொலிஸாரை நாடிய நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஃவொர் அவுஸில் அமைந்து இருக்கின்ற எடல்கமராஸ் என்ற வீதியில் கொலை இடம்பெற்றதாக தெரியவந்திருக்கின்றது.

மேலும் பொலிஸார் பொது மக்களிடம் இந்த கொலையை செய்த சூத்திரதாதியை கைது செய்வதற்குரிய தகவல்களை தந்து உதவுமாறு வேண்டுதல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content