02 வலம்புரி சங்குகளுடன் நபர் ஒருவர் கைது
திருகோணமலை நிலாவெளிப் பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விற்கப்படவிருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படை முகாமின் இரண்டாவது பொலிஸ் பொறுப்பதிகாரி நுவன் திலகரத்ன மற்றும் புலனாய்வு அதிகாரிகளான பொலிஸ் 83611 சில்வா, பொலிஸ் 32591 சதுரங்க, பொலிஸ் 81752 தினேஷ் ஆகியோர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 55வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது




