ஆசியா செய்தி

இஸ்ரேல் சிறையில் 86 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீன போராளித் தலைவர் மரணம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனம் காசா பகுதி மற்றும் மேற்குக் கரை எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கிடையில், மேற்குக் கரையானது பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸால் நிர்வகிக்கப்படுகிறது. ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது.

இதற்கிடையில், ஹமாஸ் போன்ற இஸ்லாமிய ஜிஹாத் உட்பட பல ஆயுதக் குழுக்கள் மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் செயல்படுகின்றன.

இந்த ஆயுதக் குழுக்களை பயங்கரவாத அமைப்புகளாக இஸ்ரேல் குறிவைத்து வருகிறது. இந்த ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தப் பகுதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவின் தலைவர் காதர் அடனென் (வயது 45). இவரை இஸ்ரேல் ஏற்கனவே 12 முறை கைது செய்துள்ளது. காதர் சுமார் 8 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் காதரை கைது செய்தனர். அவர் இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டதை எதிர்த்து காதர் சிறையில் கடந்த 3 மாதங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். காதர் சிறையில் வழக்கமான மருத்துவ சேவையை ஏற்க மறுத்து கடந்த 86 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

காதர் எந்த குற்றச்சாட்டும் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில், 86 நாட்களாக உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்த காதர் இன்று உயிரிழந்தார். இதை இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது.

இஸ்ரேலிய சிறையில் காதர் அடனென் இறந்த பிறகு, காசா பகுதியில் இருந்து 10 ஏவுகணைகளை வீசி பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த ஏவுகணை தாக்குதலை காசாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரம் இன்னும் வெளியாகவில்லை.

மேற்குக் கரையிலும் இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து காசா பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் பீரங்கி தாக்குதல் நடத்தியது.

இதனால் இஸ்ரேலுக்கும் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content