செய்தி

ஆண் போன்று நடித்து பல பெண்களிடம் பணம் மோசடி செய்த நபர்

 

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெண்களையும் ஆண்களையும் ஏமாற்றிய நபர் ஒருவரை சகைது செய்துள்ளனர்.

மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரிய பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்ற கணக்கு தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட தனியார் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் வலையமைப்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு அறிவித்ததுடன், இதன் மூலம் மில்லியன் கணக்கான ரூபா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட உரிய பிரிவினர் அந்தக் கணக்கு வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் வரவு வைத்த நபரிடம் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்து, அதில் TAGGED என்ற ஆன்லைன் கணக்கு மூலம் ஒரு பெண்ணுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதாகவும், பின்னர் அவரது கோரிக்கையின் பேரில் வங்கி கணக்கில் பணம் வரவு வைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அவரை சந்திக்கவே இல்லை என்பதால் அந்த உறவு நிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்திய நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையின் போது பெண் வேடமணிந்து ஆண்களிடம் இருந்து பெருமளவிலான பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த செயலி மூலம் ஆண் போன்று நடித்து பல பெண்களிடம் பணம் பெற்றதாகவும் சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content