இஸ்ரேல் தாக்குதலில் 9 வயது சிறுவன் பலி: காசாவில் தொடரும் சோகம்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 வயது சிறுவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்தன.
மேலும், வடக்கு காசாவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் பெண் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.
காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது.
போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 818 வரையான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.





