அத்துமீறுகிறது இஸ்ரேல்: ஐ.நா. அறிக்கையாளர் விசனம்!
சர்வதேச கடற்பரப்பில் ‘குளோபல் சுமுத்’ கப்பல் தொடரணியை இஸ்ரேல் தாக்கி கைப்பற்றியதை ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் Francesca Albanese கடுமையாகச் சாடியுள்ளார். ஐரோப்பாவிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இத்தகைய அத்துமீறல்கள் நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது இஸ்ரேலின் எல்லைகளற்ற நிறவெறிக் கொள்கையையே காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்புச் செயலை ஒரு சர்வதேச மனித உரிமை மீறலாக ஐ.நா. அறிக்கையாளர் அடையாளப்படுத்தியுள்ளார்.













