பறக்கும் பொருள் பற்றிய இரகசியம் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு!
நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் விண்வெளி வீரர்கள், நேற்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள், விண்வெளிப் படை மற்றும் ஈரான் போர் போன்ற தலைப்புகள் குறித்தும் அதிபர் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விண்வெளி வீரர்களின் திறமையைப் பாராட்டிய ட்ரம்ப், “இதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது பிடிக்கவில்லை, ஆனால் நமது நாட்டை மகத்தானதாக மாற்ற இவர்களைப் போன்றவர்கள் நமக்குத் தேவை” என்று கூறினார்.
அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் குறித்த இரகசியத் தகவல்களை வெளியிட விரும்புவதாகவும், அவர் மேலும் கூறினார்.
இதேவேளை ஆர்டெமிஸ் III திட்டம் 2027-ல் ஏவப்படும் என்றும், 2028-ல் மனிதர் நிலவுக்குத் திரும்புவார் என்றும் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் ’(Jared Isaacman) உறுதிப்படுத்தினார்.




